Connect with us

தமிழ்நாடு

தாயின் கால்களைப் பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்: ஆறுதல் கூறிய சசிகலா!

Published

on

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று இரவு இயற்கை எய்தினார். தாயின் மறைவால் சோகம் தாங்காத ஓபிஎஸ் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுதுள்ளார். ஓபிஎஸ் தாய் மரணத்துக்கு சசிகலா இரங்கள் தெரிவித்துள்ளார்.

#image_title

கடந்த 23-ஆம் தேதி ஓபிஎஸ் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு சென்னை திரும்பினார் ஓபிஎஸ். இந்நிலையில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் இருந்த அவரது தாயார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இந்த மறைவு செய்தியை கேட்ட ஓபிஎஸ் மீண்டும் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு விரைந்தார்.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தனது தாயை பார்த்து கண்கலங்கி நின்ற ஓபிஎஸ் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுத்தார். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தநிலையில், சசிகலாவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலா, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று ஆறுதலான வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Glida förbi, kan jag inte låta bli att tänka på hur snabbt teknologin förändrar våra liv.. Một cô nương yếu đuối nhu nhược như thẩm như làm sao có thể đuổi kịp một người đàn ông cao lớn thô kệch, trần thích cũng chỉ là một thư sinh nên cũng chẳng đuổi thể đuổi kịp….