உலகம்
அதிகரித்து வரும் கடல்நீர் மட்டம்.. இந்த நகரங்கள் எல்லாம் மூழ்கும் அபாயம்..!
அதிகரித்து வரும் கடல் நீர் மட்டம் காரணமாக இந்தியாவின் மும்பை அமெரிக்காவின் நியூயார்க் உள்பட பல நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும் போது, ‘கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் அது மும்பை, நியூயார்க் போன்ற மெகா நகரங்களை கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தார். உயர்ந்து வரும் கடல்கள் எதிர்காலத்தை மூழ்கடிக்கின்றன என்றும் கடல் மட்ட உயர்வு என்பது ஒரு அச்சுறுத்தல் மட்டுமல்ல இது ஒரு பேரழிவாக இருக்கும் என்றும் சிறிய தீவுகள், வளரும் மாநிலங்கள் உலகெங்கிலும் உள்ள தாழ்வான கடலோர பகுதிகள் நிழலில் வாழும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு பெரும் ஆபத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடல் நீர் நீர்மட்ட உயர்வு என்பது ஒரு பெரிய பிரச்சனை என்றும் சர்வதேச அளவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 3000 ஆண்டுகளில் முந்தைய நூற்றாண்டை காட்டிலும் 1900 ஆண்டுகளில் இருந்து தான் கடல் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது என்றும் கடந்த 11 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஒரே நூற்றாண்டில் உலக அளவில் கடல் மிக வேகமாக வெப்பமடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடல் நீர் இரண்டு டிகிரி வெப்பநிலை உயர்ந்தால் அதிவேகமாக கடல் மட்டம் உயரும் என்றும் அப்போது இந்தியா, சீனா, நெதர்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அனைத்தும் பெரும் ஆபத்தை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கெய்ரோ, லாகோஸ், மாபுடோ, பாங்காக், டாக்கா, ஜகார்த்தா, மும்பை, ஷாங்காய், கோபன்ஹேகன், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், புவெனஸ் அயர்ஸ் மற்றும் சாண்டியாகோ உட்பட ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மெகா நகரங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
உலகெங்கிலும் கடலோர மண்டலங்களில் வசிக்கும் 900 மில்லியன் மக்களுக்கு மிகவும் ஆபத்து என்றும் இந்த எண்ணிக்கை பூமியில் உள்ள 10 பேர்களில் ஒருவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடல் நீர் மட்டம் உயர்வதை தடுக்க சர்வதேச அளவில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடல்கள் உயர்வதற்கான மூல காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வை எட்ட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.