Connect with us

உலகம்

அதிகரித்து வரும் கடல்நீர் மட்டம்.. இந்த நகரங்கள் எல்லாம் மூழ்கும் அபாயம்..!

Published

on

அதிகரித்து வரும் கடல் நீர் மட்டம் காரணமாக இந்தியாவின் மும்பை அமெரிக்காவின் நியூயார்க் உள்பட பல நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும் போது, ‘கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் அது மும்பை, நியூயார்க் போன்ற மெகா நகரங்களை கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தார். உயர்ந்து வரும் கடல்கள் எதிர்காலத்தை மூழ்கடிக்கின்றன என்றும் கடல் மட்ட உயர்வு என்பது ஒரு அச்சுறுத்தல் மட்டுமல்ல இது ஒரு பேரழிவாக இருக்கும் என்றும் சிறிய தீவுகள், வளரும் மாநிலங்கள் உலகெங்கிலும் உள்ள தாழ்வான கடலோர பகுதிகள் நிழலில் வாழும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு பெரும் ஆபத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடல் நீர் நீர்மட்ட உயர்வு என்பது ஒரு பெரிய பிரச்சனை என்றும் சர்வதேச அளவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 3000 ஆண்டுகளில் முந்தைய நூற்றாண்டை காட்டிலும் 1900 ஆண்டுகளில் இருந்து தான் கடல் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது என்றும் கடந்த 11 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஒரே நூற்றாண்டில் உலக அளவில் கடல் மிக வேகமாக வெப்பமடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடல் நீர் இரண்டு டிகிரி வெப்பநிலை உயர்ந்தால் அதிவேகமாக கடல் மட்டம் உயரும் என்றும் அப்போது இந்தியா, சீனா, நெதர்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அனைத்தும் பெரும் ஆபத்தை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கெய்ரோ, லாகோஸ், மாபுடோ, பாங்காக், டாக்கா, ஜகார்த்தா, மும்பை, ஷாங்காய், கோபன்ஹேகன், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், புவெனஸ் அயர்ஸ் மற்றும் சாண்டியாகோ உட்பட ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மெகா நகரங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

உலகெங்கிலும் கடலோர மண்டலங்களில் வசிக்கும் 900 மில்லியன் மக்களுக்கு மிகவும் ஆபத்து என்றும் இந்த எண்ணிக்கை பூமியில் உள்ள 10 பேர்களில் ஒருவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடல் நீர் மட்டம் உயர்வதை தடுக்க சர்வதேச அளவில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடல்கள் உயர்வதற்கான மூல காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வை எட்ட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?