இந்தியா
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி, மூத்த ஆலோசகர் அலோக் அகர்வால்: யார் இவர்கள்..!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி அவர்களும் புதிய மூத்த ஆலோசகராக அலோக் அகர்வால் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆர்ஐஎல் என்று கூறப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரியார் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இவர் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்றும் பங்குச்சந்தையில் நேற்று ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அலோக் அகர்வால் இந்நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் நிலையில் தற்போது அவர் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்கு தான் ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரியார் வரும் ஜூன் மாதம் முதல் வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானியின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரியும், மூத்த ஆலோசராக அலோக் அகர்வால் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அலோக் அகர்வால் 30 ஆண்டுகாலம் அனுபவம் உள்ளவர். அவர் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்த பணியில் சேர்வார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு அலோக் அகர்வால் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருடைய நிர்வாகத்தின் கீழ் தான் ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை பெற்றது என்பது இந்நிறுவனம் கிட்டத்தட்ட 240 மடங்கு வளர்ந்தது என்பது கூறப்படுகிறது. 1993ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் இவர் 2005 ஆம் ஆண்டில் தலைமை நிதி நிர்வாகியாக மாறினார் என்பதும் இவர் கான்பூர் ஐஐடி மற்றும் அகமதாபாத் ஐஐஎம் ஆகியவற்றில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரியார் கடந்த 14 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சிட்டிகுழுமத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த நிலையில் அன்னிய செலவாணி, வர்த்தகம் ஆகியவற்றில் நல்ல அனுபவம் உள்ளவர். இந்த இரண்டு முன்னணி நபர்களால் ரிலையன்ஸ் நிறுவனம் மேலும் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.