சினிமா
போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த் கைது!

2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மனதி, மனசெல்லாம், பார்த்திபன் கனவு ஆகிய படங்களில் நடித்துள்ளார்
சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தினசரி’ திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரசாத் என்ற நபரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையின் போது, நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரசாத் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசாத் என்பவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இவரிடமிருந்து போதைப்பொருள் பெற்று பயன்படுத்தியாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போலீசாரால் வீட்டில் வைத்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
இதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் உட்கொண்டாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

















