இந்தியா
கைமாறியது ஜஸ்ட் டயல் நிறுவனம்: அம்பானி கொடுத்தது எத்தனை கோடி?

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாகவும் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை சுமார் 3,500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் வாங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் 26 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாகவும் இதனை அடுத்து ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முழுமையாக கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நிறுவனங்களை கையகப்படுத்துதல் தொடர்பான செபியின் புதிய ஒழுங்கு முறைகள் குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதன் அடிப்படையில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் நிர்வாக பொறுப்புகளை ரிலையன்ஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை மாதம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூபாய் 1020 என்ற விலையில் 1.31 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியது. இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு பங்கின் விலை 1022 ரூபாய் என்ற விலையில் 2.12 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இதனை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஜஸ்ட் டயல் நிறுவனம் வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக செயல்பட்டு வரும் விஎஸ்எஸ் மணி தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என அறிவித்துள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு சுமார் 50 ஆயிரம் ரூபாயில் மட்டுமே தொடங்கப்பட்ட ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு 12 ஆயிரம் கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 6,690 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















