Connect with us

தமிழ்நாடு

‘4 ஆம் தேதி வரை சில பணிகளை சிறப்பா செய்யணும்!’- பணப்பட்டுவாடா குறித்து ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்

Published

on

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. களத்தில் இருக்கும் இரண்டுப் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டுள்ளன.

குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சேலத்தில் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். இன்று தாராபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரச்சாரம் செய்துள்ளார். இப்படி பிரச்சாரங்கள் ஒரு பக்கம் தீவிரமடைந்து வரும் அதே வேளையில் பணப் பட்டுவாடா குறித்தப் புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘மக்கள் நமக்கு வாக்குச் செலுத்த தயாராக உள்ளார்கள். அதை கொண்டு வந்து சேர்க்க வேண்டியது நமது பொறுப்பு.

இன்று தொடங்கி வரும் 4 ஆம் தேதி வரை சில பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அமைச்சர், பணப் பட்டுவாடா செய்வதைத் தான் இப்படி சூசகமாக பேசியுள்ளார் என்று அரசியத் தளத்தில் சலசலக்கப்படுகிறது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?