இந்தியா
அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பிரசாந்த் கிஷோர்: பாஜகவுக்கு பாதிப்பா? நன்மையா?
காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சி செய்த பிரசாந்த் கிஷோர், அந்த முயற்சி பலிக்காததால் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை யாத்திரை செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்திக்கு அடுத்த இடத்தை பிரசாந்த் கிஷோர் கேட்டதாகவும் ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்ததை அடுத்து அவர் காங்கிரஸில் சேர முடிவை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இருந்து முதலில் அரசியலை துவக்க அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருப்பதாகவும் அந்த கட்சிக்கு ஜன் சுராஜ் என்ற பெயர் வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பீகார் முழுவதும் 3000 கிலோ மீட்டர் நடந்தே பாதயாத்திரை செய்யப்போவதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது இல்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறினாலும் அவர் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அணியை உருவாக்குவார் என்றும் கூறப்படுகிறது .
பாஜகவை பொறுத்தவரையில் பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்தால் காங்கிரஸுக்கு தான் பின்னடைவாக இருக்கும் என்றும் பாஜகவுக்கு நன்மைதான் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.