உலகம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் .. 82 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை

நிக்கோபார்: இந்தோனேசியாவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் சுதாரிக்கும் முன் வரிசையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் முதல் நிலநடுக்கம் 7 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 15 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அதன்பின் 5.5 ரிக்டர் அளவில் நிறைய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகள் பல இந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. மக்கள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் 82 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அதேபோல் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
















