Connect with us

இந்தியா

நடந்து முடிந்த அஞ்சல் தேர்வு ரத்து: தமிழக எம்பிக்களுக்கு அடிபணிந்தது மத்திய அரசு!

Published

on

கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கு நிலவி வரும் எதிர்ப்பு காரணமாக அந்த தேர்வை தற்போது ரத்து செய்து அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத முடியும் என அஞ்சல் துறை சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அஞ்சல் தேர்வை நடத்தலாம் ஆனால் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஞாயிற்று கிழமை அஞ்சல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையிலும், மக்களவையிலும் இது தொடர்பாக தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் இது தொடர்பாக விவாதம் நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து அமளியிலும் ஈடுபட்டனர் தமிழக எம்பிக்கள். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது விளக்கம் அளித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த ஞாயிற்று கிழமை நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்படும் தேர்வானது விரைவில் மீண்டும் நடத்தப்படும். அப்போது இந்த தேர்வானது தமிழ் மட்டுமல்லாமல் இதர அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழக எம்பிக்கள் மக்களவையில் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?