இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வா? எத்தனை சதவிகிதம் தெரியுமா?

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வை பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படையை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 சதவீதமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் நான்கு சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. இது கடத்தாண்டு தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி மாற்றம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி மேலும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய அரசு கொடுத்த உறுதிமொழி காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட பின் தற்போது பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத கால நுகர்வோர் விலை குறியீட்டில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் அது 4.23 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் தசம புள்ளியின் அடிப்படையில் 4 சதவீதம் என உயர்த்தி 42% அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சரவை நிதி அமைச்சகத்தின் செலவின துறைக்கு இந்த அகவிலைப்படி உயர்வு முன்மொழியப்படும் என்றும் விரைவில் இது குறித்த அறிக்கை மத்திய அரசு சமர்ப்பிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 4% அகவிலைப்படி உயர்வு என்பது கடந்த ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று கூறப்படுவதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















