செய்திகள்
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு காவலர்கள் காட்டிய சலுகை – அதிர்ச்சி வீடியோ

சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இளம்பெண்களை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ எடுத்த்தும் மிரட்டும் வீடியோவை நக்கீரன் கோபால் வெளியிட்டார். இதில், பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் பகீர் புகார் கூறினார்.

இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. எனவே, பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின்னர் சிபிஐ வசம் சென்றது. அவர்கள் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறி சில அதிமுக பிரமுகர்களையும் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனார்.

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் நேற்று அவர்கள் அனைவரும் போலீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின் அவர்களை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்த போது, கோவை விமான நிலையம் அருகே குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரின் உறவினர்கள் காத்திருக்க அங்கு போலீஸ் வாகனம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளிடம் சிறிது நேரம் உரையாடி பின் வாகனம் அங்கிருந்த புறப்பட்டது.
இந்த விவகாரம் வீடியோவாக வெளியானதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, காவல்துறைக்கு எதிராக கடுமையாக விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தில் வந்த 7 காவலர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Men accused in the sensational Pollachi sexual abuse case were seen talking to their family members from inside a police van while they were on their way back to the Salem prison after a court hearing in Coimbatore.
One SSI & six other cops have now been placed under suspension. pic.twitter.com/rUu63Yfy3e
— Shilpa (@Shilpa1308) October 20, 2021



















