Connect with us

தமிழ்நாடு

இது பெரியார் மண்.. பெரியார் சிலையை அகற்றிய டி.எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை!

Published

on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள உதயம் நகர் என்ற பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் பேரூராட்சி அனுமதியுடன் தனது வீட்டில் பெரியார் சிலை வைத்து இருந்த நிலையில் அந்த சிலையை காவல்துறையினர் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அனுமதி இன்றி பெரியார் சிலை வைத்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் தலைமையில் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதி இன்றி சிலை வைத்ததால் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி பெரியார் சிலை வைத்த வீட்டின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

#image_title

ஆனால் பெரியார் சிலையை அகற்ற இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி அனுமதி இன்றி வைக்கப்பட்ட பெரியார் சிலையை அகற்ற காவல்துறையினர் முடிவு செய்தனர். இதனை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் பெரியார் சிலையை சேதமின்றி அகற்றினார். அகற்றப்பட்ட பெரியார் சிலை வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் பெரியார் சிலை வைத்தவர் கோபமடைந்த நிலையில் இது குறித்து சமூக வலைதளங்களில் காட்டமான பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. பெரியார் சிலையை அகற்றும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் பெரியார் மண்ணில் பெரியார் சிலை அகற்றப்படுவதா? என்று ஆவேசமடைந்தனர்.

இந்த நிலையில் பெரியார் ஆதரவாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் பெரியார் சிலையை அகற்ற அகற்றிய காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது சமூக வலைதளத்தில், ‘காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைபிடிக்க வேண்டிய சட்டம் விதிகளை சரியாக புரிந்து கொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது என்றும் பெரியார் மண் என்று பதிவு செய்துள்ளார்.

திமுக திராவிடம் மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் இது பெரியார் மண் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பெரியார் சிலையை காவல்துறையினர் அகற்றியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. பெரியார் சிலையை அகற்றிய இருவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் பெரியார் சிலையை அகற்ற விடாமல் திமுக அரசு தடுத்திருக்க வேண்டும் என்பதே அந்த பகுதியை மக்களின் எண்ணமாக உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?