Connect with us

இந்தியா

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: என்னென்ன பொருட்களுக்கு தடை?

Published

on

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ‘காலநிலை மாற்றத்திற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் மிகப்பெரிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்காக உள்ள நிலையில் 2020 வரும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஜூலை 1ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி செய்து விற்பனை மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, ஐஸ் கிரீம் குச்சி போன்றவை இந்த வகையில் அடங்கும். இவை தவிர பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள் 100 மைக்ரோன் கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்கள் ஆகியவை அடங்கும்.

ஜூலை 1ம் தேதிக்கு முன்னதாக அதாவது ஜூன் 30ம் தேதிக்குள் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வணிகர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்கில் உள்ள விற்பனைக் கூடங்கள் என அனைத்து வணிகர்களும் அதன் இருப்பை ஜீரோ என்ற அளவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஜூலை 30ஆம் தேதிக்கு பிறகு மேற்கொண்ட பொருட்களை வைத்து இருந்தாலோ, விநியோகம் செய்தாலோ தடை செய்யபப்ட்ட பொருட்கள் கண்டெடுத்த இடம் சீல் வைக்கப்படும் எனவும், உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?