Connect with us

தமிழ்நாடு

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published

on

தற்கொலை செய்யும் வாய்ப்பினை குறைக்கும் வகையில், மிகவும் அபாயம் நிறைந்த 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாகத் தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சுமார் 60 நாட்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து, தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்திருந்த நிலையில், இப்போது நிரந்தரத் தடை விதித்துள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவிலான நச்சுத்தன்மையை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன் காரணத்தால், அதிக நச்சு விளைவுகள் ஏற்படுகிறது. தடை விதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆராய்வு செய்வதற்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினரைச் சேர்ந்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு, பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் தீவிரமாக ஆராய்வு செய்தது‌.

அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆராய்ந்த பின்னர், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழு, இதனை தடை செய்யப் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு நிரந்தரத் தடையை விதித்தது.

தடை விதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள்

வேளாண்மை பல்கலைக்கழக குழுவின் ஆராய்ச்சிக்குப் பிறகு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது..

  1. மோனோகுரோட்டோபாஸ்
  2. ப்ரோஃபெனோபாஸ்
  3. அசிபேட்
  4. ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின்
  5. குளோர்பைரிஃபோஸ் சைபர்மெத்ரின்
  6. குளோர்பைரிபாஸ்

மேற்கண்ட ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளும் தடை செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வதை தடுக்கவே, தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது‌. உண்மையில், விவசாயிகளின் நலன் காக்க வேண்டுமானால், விளைபொருட்களின் விலையை, விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும். அப்படி நடந்தால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்; அதோடு விவசாயிகளின் வருமானமும் பெருகும். அப்போது தான் விவசாயிகளுக்கு தற்கொலை என்ற எண்ணமே வராது.

ஆரோக்கியம்54 mins ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு2 hours ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா2 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு3 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்4 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா6 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்18 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா18 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868