Connect with us

இந்தியா

அமெரிக்காவில் லட்சக்கணக்கில் வருவாய்.. வேலையை ராஜினாமா செய்த இந்திய தம்பதிகள்.. அதன்பின் நடந்தது என்ன?

Published

on

அமெரிக்காவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய தம்பதிகள் ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டு மன நிம்மதியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் பாட்டியா தம்பதிகள் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் ஊழியராக இருந்தனர். ஆனால் இவர்களுக்கு அந்த நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. இயற்கை சூழலுக்கு எதிராக மனிதர்கள் இருப்பதாக உணர்ந்த அவர்கள் மன நிம்மதி இல்லாமல் அந்த வேலையை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற போதுதான் இயற்கையின் அதிசயத்தை அறிந்து அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதனை அடுத்து இயற்கை சூழலுடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்து அவர்கள் உடனடியாக தங்கள் பணியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து இந்தியா திருப்பிய மகேஸ்வரி மற்றும் பாட்டியா தம்பதியினர் மத்திய பிரதேச மாநிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.

ஆர்கானிக் விவசாயம் குறித்து முழு ஆய்வு செய்து அதன் பின் இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்தனர். இப்போது தங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைத்து வருவதாகவும் இந்த வருமானம் தங்களுடைய வாழ்க்கைக்கு போதும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இயற்கையோடு வாழ்வது தங்களுக்கு மன நிம்மதியாக இருக்கிறது என்றும் மனிதர்கள் எந்த அளவு சுற்றுச்சூழலை சுரண்டுகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம் என்றும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆர்கானிக் விவசாயம் குறித்து தங்களால் முடிந்தவரை அந்த பகுதி மக்களுக்கு அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வது எவ்வளவு நல்லது என்பதை கூறி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தற்போது தற்போது அவர்கள் இயற்கை சூழலுடன் வாழ வேண்டும் என்பதற்காக மண் சுவற்றால் கட்டப்பட்ட வீட்டில் தான் குடியிருந்து வருவதாகவும் வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்று அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்த இந்த தம்பதிகள் தற்போது மண் சுவர் உள்ள வீட்டில் ஆர்கானிக் விவசாயம் செய்து வரும் நபர்களாக மாறி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆரோக்கியம்1 hour ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு2 hours ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா2 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு3 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்4 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா6 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்18 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா18 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868