இந்தியா
இனி ரயிலில் டிக்கெட் புக் செய்ய பணம் தேவையில்லை: பேடிஎம் அதிரடி அறிவிப்பு
இதுவரை ரயிலில் பயணம் செய்வோம் டிக்கெட் புக் செய்யும்போது ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தி வரும் நிலையில் இனி ‘பை நவ் பே லேட்டர்’ என்ற சலுகை மூலம் பணமே இல்லாமல் ரய்ல் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.
முதலில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டுஅதற்குப் பிறகு வேறொரு குறிப்பிட்ட நாளில் அந்த பணத்தை திருப்பி செலுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொண்டு பை நவ் பே லேட்டர் என்ற புதிய வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. ரயில் டிக்கெட் மட்டுமின்றி யுடிலிட்டி பில்ஸ், ஷாப்பிங் செய்ய, சிலிண்டர் வாங்க என பல வழிகளில் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த திட்டத்தை பயன்படுத்தி சலுகையை பெற்றவர்கள் 30 நாட்கள் வரை ரூ.60,000 வரை செலவு செய்து வட்டியில்லா திரும்ப செலுத்தி கொள்ளலாம். 30 நாட்களில் செலுத்த முடியவில்லை என்றால் வட்டி வசூலிக்கப்படும் என்றும், மேலும் ஒரு சலுகையாக குறைந்த வட்டியில் ஈஎம்ஐ முறையிலும் பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது.