Connect with us

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு பணம்? முதல்வர் அறிவிப்பு

Published

on

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தின்போது பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பணம் கொடுக்கப்படுவது தமிழகத்தில் வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு பணம் கொடுக்கப்படாமல் பொங்கல் பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பொருட்களுடன் பணம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சட்டம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தை பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர் மற்றும் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2356.67 கோடி செலவினம் ஏற்படும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும் அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?