சினிமா செய்திகள்
பரியேறும் பெருமாள்’ கதையே தனுஷுக்கு எழுதியதுதான்: மாரி செல்வராஜ்
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் நான்காவது பாடல் வெளியானது. அதுமட்டுமின்றி இன்று ‘கர்ணன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,
இந்த சந்திப்பின்போது இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியபோது ‘தனுஷை கதாநாயகனாக நினைத்து எழுதப்பட்ட கதைதான் ’பரியேறும் பெருமாள்’ என்றும் அவர் தெரிவித்தார். இந்த விழாவில் தனுஷ் கலந்து கொள்ளாவிட்டாலும் மாரிசெல்வராஜ்க்கு தனுஷ் நன்றி கூறி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ’கர்ணன் படம் எனக்கு ஒரு நடிகனாக மனிதனாக நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்தது என்றும் என்னை உங்கள் கர்ணனனாக மாற்றியதற்கும், என் வாழ்க்கையில் நீங்கள் வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி’ என்றும் அவர் கூறியுள்ளார்,
இன்று நடைபெற்ற ‘கர்ணன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.