இந்தியா
சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற உறுதிப்படுத்தல் (Confirmation by High Court):
அமர்வு நீதிமன்றம் (Sessions Court) ஒருவருக்கு மரண தண்டனை விதித்தாலும், அது நிறைவேற்றப்படுவதற்கு உயர் நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தல் கட்டாயமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 368-ன் கீழ் உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ய வேண்டும். தற்போது BNSS sec 407
இதன் அடிப்படையில் சாத்தான் குளம் வழக்கினை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மாண்புமிகு க.முத்து குமரன் அவர்கள் கொடுத்த தீர்ப்பில் வழக்கின் மதுரை அமர்வு உயர்நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டு இருந்தார். தீர்ப்பு பக்கம் 617
தற்போது சாத்தான் குளம் வழக்கு உயர்நீதிமன்றத்தில் 21.04.2026 ல் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் 24.04.2026 ல் மாண்பமை நீதியரசர்கள் என்.ஆனந்த் வெங்கடேஷ் கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகின்றது.





