Connect with us

இந்தியா

இளைஞர்கள் இந்த கலாச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.. மூன்லைட்டிங் குறித்து இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி..!

Published

on

By

வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் மூன்லைட்டிங் ஆகிய கலாச்சாரத்தில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பல ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை கடைபிடித்து வருகின்றனர் என்பதும் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்து இயல்புநிலை திரும்பினாலும் கூட பலர் அலுவலகம் வந்து வேலை செய்ய மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறை இரண்டு நாட்கள் அலுவலகம் வந்து பணிபுரியும் முறை பல அலுவலகங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் முழுமையாக அலுவலகம் வந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதற்கு அலுவலகத்திற்கு செல்லும் நேரம் மிச்சம் உள்பட பல்வேறு வசதிகள் இருந்தாலும் பலர் மூன்லைட்டிங் என்று கூறப்படும் ஒரே நேரத்தில் இரண்டு அலுவலகங்களில் வேலை செய்யும் முறையை கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து பணி செய்யும்போது இரண்டு நிறுவனங்களில் பணி செய்து இரண்டு நிறுவனங்களிடம் இருந்து இரண்டு சம்பளம் பெறுவது என்பது எளிதாக இருப்பதாக பல ஊழியர்கள் நினைப்பதால் இந்த மூன்லைட்டிங் என்ற முறையை எடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் வீட்டில் இருந்து பணி செய்வது மற்றும் மூன்லைட்டிங் ஆகியவற்றிற்கு எதிராக இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் வெளியேறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பொருளாதார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் வீட்டில் இருந்து வேலை செய்வதை இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டாம் என்றும், மூன்லைட்டிங் முறையை கடைபிடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இளைஞர்கள் மூன்லைட்டிங் முறையில் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் அலுவலகம் வந்து வேலை செய்தால் தான் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்போசிஸ் நிறுவனத்தை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்து மூன்லைட்டிங் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் இளைய தலைமுறையினர் அலுவலகம் வந்து வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர்களுக்கு தற்போது தீராத ஆசை இருப்பதால் மூன்லைட்டிங் என்ற வலையில் விழுந்து விடுகிறார்கள் என்றும் பின்னால் அது அவர்களுக்கு பெரிய சோகமாக அமையும் என்றும் அலுவலகம் வந்து வேலை செய்தால் மட்டுமே நல்ல அனுபவங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு தேவை நேர்மையான கலாச்சாரம் என்றும் அதில் பாரபட்சமில்லை என்றும் நாடு முன்னேற விரைவான முடிவு எடுப்பது மற்றும் தொந்தரவு இல்லாத பரிவர்த்தனைகள் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். விரைவாக முடிவெடுப்பது, விரைவாக செயல்படுத்துவது, தொந்தரவு இல்லாத பரிவர்த்தனை, பரிவர்த்தனைகளில் நேர்மை, விருப்பு வெறுப்பு இல்லாத கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் கடினமாக உழைப்பவர்கள், நேர்மையாக பணியாற்றுபவர்கள் நல்ல ஒழுக்கம் கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகம்11 mins ago

அரசு பணத்தை ரூ.1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற 48 வயது பெண்.. எப்படி தெரியுமா?

சினிமா15 mins ago

பிரியங்கா சோப்ராவுக்கே இப்படியொரு கொடுமை நடந்திருக்கா? பரபரக்கும் பாலிவுட்!

சினிமா29 mins ago

அய்யோ! யார பார்க்குறதுன்னே தெரியலையே.. ஜிம் உடையில் கிக்கேற்றும் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா மேனன்!

சினிமா40 mins ago

லியோ படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சினிமா52 mins ago

சிவகார்த்திகேயன் தொடுத்த சம்பள பாக்கி வழக்கு ஒருவழியா செட்டில் ஆனது!

சினிமா9 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு9 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா10 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா10 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்10 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு5 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+