Connect with us

தமிழ்நாடு

மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிர்மலா தேவி!

Published

on

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். இந்நிலையில் தற்போது அவர் நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்திருந்த நிர்மலா தேவி, நீதிமன்ற வளாகத்தில் கண்களை மூடி தியானம் செய்தது போன்ற காட்சி ஊடகங்களில் வெளியானது. அப்போது கண்களை மூடி தியானிப்பது போல இருந்த நிர்மலா தேவி, காமாட்சி அம்மன் தனக்குள் இருப்பதாக கூறினார். மேலும் தன்னை மாட்டிவிட்ட அந்த கல்லூரி மாணவிகள் தூக்கிட்டு இறந்துவிட்டதாக பொய் கூறினார்.

மேலும் தொடர்ந்து ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். மொபைல் போனை தரையில் ஓங்கி அடித்து, அதனை சரிசெய்ய சென்ற கடையிலும் தியானம் செய்வது போல நடந்துகொண்டார். மேலும் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து, காகிதங்களை பொறுக்கிக்கொண்டு அவர் செய்த செயல்கள் பீதியை கிளப்பும் விதமாக இருந்தது.

இந்நிலையில் நிர்மலா தேவி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர் நெல்லையில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு ஆறு நாட்கள் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?