Connect with us

செய்திகள்

கொரோனா பயத்தில் தாய், மகன் தற்கொலை – மதுரையில் அதிர்ச்சி

Published

on

suicide

தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் 11 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.

ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி மீதுள்ள அச்சத்தில் சிலர் அதை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். ஒருபக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உயிர் போய்விடும் எனவும் அறியாமை காரணமாக சிலர் நினைக்கிறார்கள். இந்த அறியாமையால் மதுரையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை கல்மேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஜோதிகா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தனது 3 வயது மகன் ரித்தீஷோடு தனது தாய் லட்சுமி மற்றும் தம்பி சிபிராஜுடன் வசித்து வந்தார்.

சமீபத்தில் ஜோதிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வீட்டில் அனைவருக்கும் பரவி விடும் என்கிற பயத்தில் ஜோதிகா, லட்சுமி, ரித்தீஷ் ஆகியோர் தற்கொலை செய்ய முடிவெடுத்து சாணி பவுடரை கரைத்து குடித்தனர். தனது 3 வயது மகன் ரித்தீஷையும் அதை குடிக்க வைத்தனர். இதில், ஜோதிகாவும், ரித்தீஷும் உயிரிழந்தனர். லட்சுமியும், சிபிராஜும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா என்பது குணமடையக்கூடிய நோய் என்பதை மக்கள் உணர வேண்டும். கொரோனா நோய்க்கு தற்கொலை தீர்வல்ல, தடுப்பூசி போட்டுக்கொள்வது, நோய்த்தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள முடியும் என மக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?