இந்தியா
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா தேர்தல் எப்போது? – தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவது இல்லை. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதேபோல் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்கிற அறிவிப்பை இன்று மாலை 3.30 மணிக்கு அறிவிக்கவுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்தலை நடத்துகிறது தேர்தல் ஆணையம்.