ஆரோக்கியம்
முடி மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.-தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்.

முடி மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பினபற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவதுஃ
முடிமாற்ற அறுவை சிகிச்சை கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மருத்துவ அவசர நிலைகளை கண்காணித்து கையாளும் வசதிகளை பராமரிக்க வேண்டும். அதற்கான உபகரணங்கள் இருக்க வேண்டும்.
இந்த மருத்துவ பயிற்சியாளர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் எம்சிஎச் டிஎன்பி அல்லது தோல் மருத்துவத்தில் எம்டி டிஎன்பி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அதேபோல அழகியல் நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் குறித்தும் போதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவை அவசர அறவை சிகிச்சைகள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் என்பதால் தகுதிவாய்ந்த தோல் மருத்துவர் அல்லது பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நிறுவனங்களுக்கு போதுமான மயக்க மருந்து காப்புப்பிரதியை உறுதி செய்ய வேண்டும்.
அறுவை சிகிச்சை அறை பகுதிக்குள் ஒரு மயக்க மருந்து நிபுணர் இருக்க வேண்டும். ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு மருத்துவ நிபுணர் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இடம் போதுமான அறுவை சிகிச்சைக்கு முந்தைய அனுமதிகளை பெற வேண்டும்.
அழகு சாதன சேவைகளை வழங்கும் மருத்தவமனைகளுக்கு பொதுவான குறைந்தபட்ச தர நிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் ஒரு தோல் மருத்துவர் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரால் நிர்வகிக்கப்படவேண்டும்.
அந்த நிறுவனங்களுக்குள் அணைத்து மருத்துவ நடைமுறைகளும் இந்திய தோல் மருத்துவர்கள் மற்றம் தொழுநோய் மருத்துவர்கள் சங்கம் மற்றம் இந்திய தோல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச நடைமுறை வழிகாட்டுதல்களின் படி அதனை பின்பற்ற வேண்டும்.
மருத்துவர்கள் செவிலியர்கள் மருந்தாளுநர்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் பிசியோதெரபிஸ்டுகள் ஆகியோரின் பதிவு எண்ணை குறிப்பிட்ட விண்ணப்பதாரர் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சுகாதார சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
தீ பாதுகாப்பு உரிமம், மற்றும் தீ பாதுகாப்பு அணைப்பான், வாடகை ஒப்பந்தம், உபகரணங்களின் பட்டியல், மாசு கட்டுப்பாட்டு வாரிய உரிமம், கட்டிட நிலைத்தன்மை மருந்தக உரிமம். ரத்த வங்கி உரிமம், லிப்ட் உரிமம் உள்ளிட்டவை பெற்று இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.














