தமிழ்நாடு
நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியை உள்பட மூவர் கைது!

நெல்லையில் இன்று காலை சாஃப்டர் என்ற பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான நிலையில் அந்த பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையில் உள்ள சாப்ட்வேர் பள்ளியில் இன்று காலை 11 மணிக்கு இடைவேளை விட்டு இருந்தபோது திடீரென அந்த பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 4 மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்றும் அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெல்லை சாஃப்டர் பள்ளி தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வருவாய் ஆய்வாளர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் நெல்லை பள்ளி தாளாளர், தலைமையாசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






















