சினிமா செய்திகள்
அஜித் மீது அதிருப்தியில் நயன்தாரா…!
அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் கதை பிடிக்காததால் அஜித் படம் இயக்கும் வாய்ப்பு கைநழுவி போனது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு. இந்த விவகாரத்தில் கணவரின் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றை நடிகை நயன்தாரா அஜித் மீது அதிருப்தியில் உள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதமே நடிகர் அஜிதின் படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார் விக்னேஷ் சிவன். இந்த வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகத்தில் இருந்த விக்னேஷ் சிவன், கடவுள் அருளால் கனவுகள் அனைத்தும் நனவாகும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி அஜித் சார். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவனின் கதை அஜித்துக்கும் படத்தை தயாரிப்பதாக இருந்த லைக்கா நிறுவனத்துக்கும் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பை தொடங்கும் முன்பே லைக்கா நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது. இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ள விக்னேஷ் சிவன், தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் உடனான படம் குறித்து தான் பதிவிட்டிருந்த பதிவுகளை நீக்கிய விக்னேஷ் சிவன், கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கினார். இதன்மூலம் அஜித் படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது.
இந்நிலையில் நயன்தாராவுக்கும் அஜித்துக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இருவரும் பில்லா, ஆரம்பம், விசுவாசம் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளனர். இதனால் நயன்தாரா பிரச்சனையைத் தீர்க்க முயன்றார் ஆனால் முடியவில்லை. எனவே எந்த சூழ்நிலையிலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் என்று அவர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கணவருக்கு ஆசைக்காட்டி கடைசி நேரத்தில் வாய்ப்பை பறித்துக்கொண்டு மோசம் செய்ததாக நடிகர் அஜித் மீது நயன்தாரா அதிருப்தியில் உள்ளதாக தகவல் கூறுகின்றன.