Connect with us

சினிமா செய்திகள்

நடிகை கங்கனா ரனாவத் கைது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மும்பை காவல்துறை!

Published

on

பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மும்பை காவல்துறையினர் வழக்கு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கங்கனா ரனாவத் கைது செய்வது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ள தகவலை தற்போது பார்ப்போம்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் அரசியல் கருத்துக்களை தெரிவிக்கும் அவர் சமூகக் கருத்துக்களையும் சர்ச்சைக்குரிய வகையில் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியது தொடர்பாக சீக்கிய அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறை கங்கனா மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற போது நடிகை கங்கனா ரனாவத்தை அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என மும்பை காவல்துறை உறுதி அளித்துள்ளது.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கங்கனா ரனாவத் மீதான புகார் குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த விசாரணை முடியும் வரை அவரை கைது செய்ய மாட்டோம் என்றும் கூறினார். இதனை அடுத்து நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?