Connect with us

தமிழ்நாடு

நிவாரண பணி செய்த பாஜகவினர்களை மிரட்டினாரா அமைச்சர் சேகர்பாபு? வைரல் வீடியோ

Published

on

கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாஜகவினர் நிவாரண பணி செய்தபோது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பாஜக தொண்டர்கள் மிரட்டியதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர் என்றும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் உணவு உள்பட அடிப்படை ஆதாரம் இன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொளத்தூர் பகுதியில் பாஜகவினர் நிவாரண பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்றும், அப்போது அங்கு வந்த அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பாஜக தொண்டர்களை மிரட்டியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் டுவிட்டரில் அவர் கூறியதாவது: கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்களை ஆளும் கட்சியினுடைய அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும்! நீங்களும் செய்ய மாட்டீர்கள் செய்பவர்களையும் விட மாட்டீர்கள். இதுதான் திமுக கட்சியினுடைய அழகு’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் சேகர்பாபு விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?