சினிமா
பாரதிராஜாவை சந்தித்த மணிரத்னம்: காரணம் இதுதான்!
இயக்குநர் பாரதிராஜாவை சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் சந்தித்தது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானது. உலக அளவில் இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து முதல் பாடலாக ‘அகநகமுக’ பாடல் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இதற்காக, ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
முதல் பாகத்திற்கு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா வைத்தது போல, இரண்டாம் பாகத்திற்கும் படக்குழு இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட மற்ற புரோமோஷன் பணிகளையும் திட்டமிட்டு வருகிறது. இதற்கான அழைப்பாகவே இயக்குநர் மணிரத்னம் இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து இருக்கிறார். இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலகில் இருந்து பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதுகுறித்தான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.