Connect with us

சினிமா

பாரதிராஜாவை சந்தித்த மணிரத்னம்: காரணம் இதுதான்!

Published

on

இயக்குநர் பாரதிராஜாவை சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் சந்தித்தது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானது. உலக அளவில் இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து முதல் பாடலாக ‘அகநகமுக’ பாடல் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இதற்காக, ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

முதல் பாகத்திற்கு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா வைத்தது போல, இரண்டாம் பாகத்திற்கும் படக்குழு இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட மற்ற புரோமோஷன் பணிகளையும் திட்டமிட்டு வருகிறது. இதற்கான அழைப்பாகவே இயக்குநர் மணிரத்னம் இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து இருக்கிறார். இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலகில் இருந்து பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதுகுறித்தான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?