செய்திகள்
எனக்கு தடுப்பூசி வேண்டாம்!… மரத்தின் மீது ஏறி ரகளை செய்த நபர்.. வைரல் வீடியோ
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். கணிசமானவர்கள் இறந்துவிட்டனர். இன்னும் கொரோனோ தொற்றின் வீரியம் முழுதாக குறையவில்லை. அதோடு, ஓமைக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது.
எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியை உலக சுகாதார மையம் வலியுறுத்தியது. அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு செலுத்தியது. இந்தியாவிலும் பல லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். ஆனால், தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறி கணிசமான பேர் தடுப்பூசி போட தயங்கி வருகின்றனர். எனவே, அவர்களை வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட வைக்கும் பணியை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி போட வந்த அதிகாரிகளிடம் ‘நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்’ எனக்கூறி ஒரு நபர் மரத்தின் மீது ஏறிக்கொண்டு கீழே இறங்காமல் அடம்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.
ஏற்கனவே, தடுப்பூசி போட வந்த நகராட்சி ஊழியர்களிடம் ஒரு மூதாட்டி தடுப்பூசி போட மறுத்து ‘நான் சாமி.. மாரியம்மா..அங்காளம்மா.. எனக்கே தடுப்பூசியா?’ என அவர் சாமியாட துவங்கிய வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
Vaccine hesitancy at its peak!
"I will not take the vaccine, you can't get me",says a 40 year old man after climbing a tree @ Puducherry when the health dept. workers insisted him to take the #COVID19 jab.#vaccination#CovidIndia pic.twitter.com/1a8B5MdZb1
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) December 28, 2021