Connect with us

இந்தியா

மின்சார கட்டணம் செலுத்தாததால் அடித்தே கொல்லப்பட்ட முதியவர்: அதிர்ச்சி சம்பவம்!

Published

on

மின்சார கட்டணம் செலுத்துவதற்காக பணம் கொடுத்திருந்த நிலையில் மின்சார கட்டணம் செலுத்தாமல் அந்த பணத்தை செலவழித்த நபரை, பணம் கொடுத்த நபர் அடித்தே கொலை செய்த சம்பவம் குருகுராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குருகிராம் அருகில் உள்ள கோஷ்கர் என்ற கிராமத்தில் 19 ஆயிரம் மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சாகர் யாதவ் என்பவர் குமார் என்பவரிடம் பணம் கொடுத்து இருந்தார். ஆனால் இந்த பணத்தில் அவர் மூவாயிரம் ரூபாய் தான் சொந்த செலவுக்காக செலவழித்துவிட்டு மின்சார கட்டணம் செலுத்த தவறிவிட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மின்சார ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாகர் யாதவ், குமாரிடம் சென்று ஏன் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு 3000 ரூபாய் செலவழித்து விட்டதாக கூறிய அவர் மீதமுள்ள 16,000 ரூபாயை கொடுத்து விட்டு விரைவில் அந்த மூவாயிரம் ரூபாயை கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சாகர், இன்னும் ஒரு நாளில் 3000 ரூபாயை கொடுக்காவிட்டால் விபரீதம் நடக்கும் என்று எச்சரித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குமாரை அழைத்த சாகர் யாதவ் 3000 ரூபாய் ஏன் இன்னும் தரவில்லை என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் சாகர் யாதவ் மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து குமாரை பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த குமாரை அவரது வீட்டில் முன் போட்டுவிட்டு சாகர் யாதவ் உள்பட நான்கு பேர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் குமாரின் மகன் தனது தந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் புதன்கிழமை மாலை அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதன் பிறகு இறுதி சடங்கு நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள குருகிராம் போலீசார் தலைமறைவாக உள்ள சாகர் யாதவ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். தற்போது வரை இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது. மின்சார கட்டணம் செலுத்துவதற்காக கொடுத்திருந்த பணத்தில் 3000 ரூபாய் செலவு செய்ததால் ஒரு உயிர் போய்விட்டது என்பதும் நான்கு பேர்கள் தலைமறைவாக இருப்பதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?