சினிமா
செல்ஃபி புள்ளைகளுக்கு மம்முட்டி அட்வைஸ்!
கேரளா காசர்கோட்டில் உள்ள ஒரு மசூதிக்கு நடிகர் மம்முட்டி செல்ஃபிதொழுகைக்காக சென்றார். அப்போது, அவரை சூழ்ந்த இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுக்க முயன்றனர்.
மம்முட்டியுடன் வந்தவர்கள் அந்த இளைஞர்களின் மொபைல்களை புடுங்கினர். அதனை தடுத்து, மொபைல்களை திருப்பிக் கொடுக்க சொன்ன மம்முட்டி, செல்ஃபி எடுப்பதற்கு சில இடங்கள் உள்ளன. இது வழிபாட்டுத் தலம் இங்கு செல்ஃபி எடுப்பது முறையல்ல, அமைதியாக இறைவனை வணங்க வேண்டும் என்று குணமாக சொல்ல, இளைஞர்கள் செல்ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, அவருடன் தொழுகைக்கு சென்றனராம்.
சமீபத்தில், க்கள் பிரபலங்களுக்கு மிகப்பெரிய தொல்லையாக மாறி வருகிறது. நடிகர் சிவகுமார், கோபப்பட்டு செல்போனை தட்டிவிட்டு, நெட்டிசன்களிடம் வசமாக சிக்கி சின்னாபின்னமான சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.