இந்தியா
மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 895 பேரை பலி வாங்கிய கொரோனா!
இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 895 பேர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 48,700 ஆகக் குறைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 66,358 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 24 மணி நேரத்தில் 162 நபர்கள் கொரோனா தொற்றா இறந்துள்ளனர்.
இதுவரை மகாராஷ்டிராவில் 44,10,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 6,72,434 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில் மட்டும் 24 மணி நேரத்தில் 4,014 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 59 நபர்கள் இறந்துள்ளனர்.