Connect with us

இந்தியா

இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

Published

on

நாம் போன் அழைப்புகளை ஏற்கும் போது முதலில் பலரும் பயன்படுத்தும் முதல் வார்த்தை ஹேலோ. இந்த ஹேலோவுக்கு பதிலாக வேறு வார்த்தையைக் கூறச் சொன்னால் என்ன செய்வீர்கள்.

மகாராஷ்டிராவில் அந்த மாநில அரசு ஊழியர்கள் இனி போன் அழைப்புகளை ஏற்கும் போது இனி ஹேலோ எனச் சொல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஹேலோவிற்கு பதிலாக வந்தேமாதரம் என்று தான் சொல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹேலோ என்பது மேற்கத்தியக் கலாச்சாரம். எனவே அதை தவிர்த்து வந்தேமாதரம் என சொல்லுங்கள் என அரசு ஊழியர்களுக்குச் சுற்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அரசு ஊழியர்களை ஒருவர் சந்திக்க வரும் போதும் வந்தேமாதரம் என்பதைப் பயன்படுத்தியே வரவேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தேமாதரம் என்றால் என்ன?

வந்தேமாதரம் என்றால் ‘தாயே உனக்கு எங்கள் வணக்கம்’ என்பது அர்த்தம் என கூறப்படுகிறது.

நாவலாசிரியர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1882-ம் ஆண்டு வங்க மொழியில் எழுதிய ஆனந்தமடம் என்ற நூலில் ‘வந்தேமாதரம்’ எனற வார்த்தை குறிப்பிடப்பட்டு இருந்தது. 1896-ம் ஆண்டு நடைபெற்ற 12வது தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் எடுத்த முயற்சியால் இந்த முழக்காம் பொது விழாக்களில் பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி தான் எழுதும் கடிதங்களில் வந்தேமாதரம் என குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் இது சுதந்திர முழக்கமாகவும் மாறியது.

வணிகம்22 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?