Connect with us

இந்தியா

சபரிமலை தீர்ப்பு: வரவேற்கும் மதுரை ஆதீனம்!

Published

on

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வரவேற்றுள்ளார். இதனால் கோவிலின் புனிதம் கெடாது என தெரிவித்துள்ளார் அவர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளன. 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மாதவிலக்கு வருவதால் தீட்டு எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர், நரிமன் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. இதில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மற்ற நான்கு நீதிபதிகளும் ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பளித்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியிருப்பதாவது, சம உரிமையை கொடுத்திருக்கிறது இந்த தீர்ப்பு. சபரிமலைக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் என்று நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சொன்னேன்.

பாகுபாடு பார்க்காமல் அனைத்து வகையான பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிப்பதுதான் நியாயமானது. இதில் கோயிலின் புனிதன் கெடுவதற்கு எந்த வகையான வாய்ப்பும் இல்லை. மாதவிலக்கு பெண்களால் புனிதம் கெடும் என்கிறார்கள். மாதவிலக்கு பெண்கள் கோவிலுக்கு வருவதை எப்படி சோதனை செய்வீர்கள்? பெண் காவலர்களை நியமிப்பீர்களா?.

ஏமாற்றிச்செல்லக்கூடிய பெண்கள் இருக்கலாம் அல்லவா? அதனால் வயது வரம்பு பார்க்காமல் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தீர்ப்பு கொடுத்திருப்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுபவத்தை, ஆற்றலை, முதிர்ச்சியை காட்டுகிறது. கோயிலின் புனிதம் கெடாது என்பதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன். ஒன்றரை ஆண்டுகள் விசாரணை நடத்தி அனுபத்தின் அடிப்படியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை உண்மையில் பாராட்டுகிறேன் என்றார் அவர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 minutes ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா25 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா15 மணி நேரங்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

இந்தியா24 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் | 12 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம்: சீமான் கருத்து

வணிகம்7 நாட்கள் ago

சென்னையில் முட்டை விலை 20 காசுகள் குறைவு: புதிய விலை அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்க டிமொனிடைஸேஷன் வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் செய்யும் புதிய தணிக்கை குழு.. எப்போது தெரியுமா?

சினிமா6 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

இந்தியா7 நாட்கள் ago

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு: யார் அளவுக்கு அதிகமாக கடன் பெறுகிறார்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்கம் டிமொனிடைஸேஷன் நடந்தால் என்ன நடக்கும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சென்சார் சான்றிதழ்கள் என்னென்ன? முழு விளக்கம்

தமிழ்நாடு7 நாட்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

Translate »