Connect with us

இந்தியா

3 மாத ஆண் குழந்தைக்கு “லேப்ராஸ்கோபிக்” சிகிச்சை: எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை!

Published

on

இந்தியத் தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மாதங்களே ஆன ஆண் குழந்தைக்கு, 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு ஏற்பட்டது. சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இருந்த காரணத்தால், சிறுநீர்ப் பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்வது பாதிக்கப்பட்டு பிரச்சனை தீவிரமானது.

லேப்ராஸ்கோபிக்

சிறுநீர் அடைப்பால் பாதிக்கப்பட்ட 3 மாத ஆண் குழந்தைக்கு, ‘லேப்ராஸ்கோபிக்’ சிகிச்சையின் மூலம் சிறுநீர் அடைப்பை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில், குழந்தைகள் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் பாஜ்பாய் தலைமையில் மருத்துவர்கள், மயக்க மருந்தைக் கொடுத்து ஆபரேஷன் செய்து முடித்தனர். சுமார் 2 மணி நேரத்தில் இந்த சிக்கலான ஆபரேஷன் முடிந்தது.

ஆபரேஷன் முடிந்து, அடுத்த மூன்று நாட்களில் குழந்தை வீட்டிற்கு அனுப்பப்பட்டது. ஆபரேஷன் செய்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், குழந்தைக்கு மருத்துவர்கள் ‘ரெனோகிராம்’ சோதனையைச் செய்தனர். இந்த சோதனையில், சிறுநீர் அடைப்பு நீங்கி, சிறுநீர்த் தடையின்றி வருவது தெரிய வந்தது. ஆகவே, சோதனை வெற்றி பெற்றுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இனி எதிர்காலத்தில் அக்குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறினர். சிறுநீரக அடைப்பிற்கு ‘லேப்ராஸ்கோபிக்’ ஆபரேஷன் செய்யப்பட்ட, உலகிலேயே மிகவும் இளவயது நோயாளி எனும் பெயரை, இந்த சிறு குழந்தை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?