Connect with us

இந்தியா

ஹிஜாப் வழக்கின் நீதிபதிக்கு மிரட்டல்: பிரபல நடிகர் கைது!

Published

on

கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் குறித்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிரான கருத்தை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்த கன்னட நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனை அடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு முடியும் வரை மாணவர்கள் மாணவிகள் எந்த விதமான மத அடையாளத்துடன் பள்ளிக்கு செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத அடையாளத்துடன் வரும் மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் அதையும் மீறி கர்நாடகத்தில் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்துவரும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கன்னட நடிகர் சேத்தன் குமார் என்பவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்‌ஷித்துக்கு எதிராக கருத்து கூறிய சேத்தன் குமார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?