சினிமா செய்திகள்
முன்னாள் மனைவி சரிகாவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கின்றாரா கமல்?
கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகா பணத்திற்கு கஷ்டப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த கமல் முன்வந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரிகா அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில்தான் பணத்திற்காக கஷடப்பட்டதாகவும் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளத்திற்கு ஆக நடிக்க சென்றதாகவும் கூறியிருந்தார்
சரிகாவின் மகள்கள் ஸ்ருதிஹாசன்மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் லட்சக்கணக்கில் திரை உலகில் சம்பாதித்து வரும் நிலையில் சரிகாவுக்கு அவர்கள் உதவவில்லையா என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில் சரிகாவின் பேட்டியை கமலஹாசன் சமீபத்தில் பார்ப்பதாகவும் இதனை அடுத்து தனது முன்னாள் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்ய முன் வந்து இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பினரோ அல்லது சரிகா தரப்பினரோ விளக்கம் அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.