Connect with us

இந்தியா

75% மதிப்பெண்களை பெறாத மாணவர்கள் ஜே.ஈ.ஈ தேர்வை எழுத முடியுமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜே.ஈ.ஈ தேர்வு எழுதும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அது குறித்து தற்போது தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

ஐஐடி உள்படம் உயர் படிப்புகளில் சேர்வதற்கு ஜே.ஈ.ஈ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தேர்வு மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு தமிழ் உள்பட பலமொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் ஆங்கிலத்திலும் இந்த தேர்வு எழுதும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு தேர்வு ஜனவரி 24 முதல் 31ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்வு எழுத குறைந்த பட்சம் 75% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தகுதியை தற்போது தேசிய தேர்வு முகமை நீக்கி உள்ளது. மொழிவாரியான கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி வாரியங்களிலும் 75% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

இதனால் 12 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்களை பெறாத தமிழக மாணவர்களும் ஜே.ஈ.ஈ தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கைகளை அடுத்தே தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?