Connect with us

இந்தியா

பங்குச்சந்தையில் ரூ.100 கோடி மோசடி செய்த தம்பதி.. ஏமாந்த பிரபல நடிகர்கள்

Published

on

கேரளாவை சேர்ந்த தம்பதிகள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து இரட்டிப்பு வருமானம் தருவதாக பிரபல நடிகர்கள் உள்ளிட்ட பலரிடம் ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த வர்கீஸ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி ஆகிய இருவர் போலியான நிறுவனம் ஒன்றை நடத்தி அந்த நிறுவனத்தின் மூலம் முதலீட்டாளர்களை கவர்ந்தனர். குறிப்பாக அவர்களது குறி டாக்டர்கள் மற்றும் பிரபல நடிகர்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது.

சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு பணத்தை பெற்ற பின்னர் அவர்கள் திடீரென தலைமறைவானதாகவும் தெரிகிறது. முதலீட்டாளர்களின் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் ஆடம்பர செலவு செய்ததாகவும் கோவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இருவரும் தம்பதி சதவீதமாக செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி சூதாட்டத்திலும் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் முதலீட்டார்கள் சுமார் 120 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். இருப்பினும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் டெல்லி விமான நிலையத்தில் அவர்கள் தரையிறங்கிய போது கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் பிரபல நடிகர்கள் உள்பட சுமார் 120 பேர்களிடம் 100 கோடி ரூபாய் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு சில ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி முதலீடு பெற்றதாகவும் அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ததாகவும் கூறியுள்ளனர். பங்குச்சந்தை பெயரை வைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த தம்பதி மீது 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?