தமிழ்நாடு
இரண்டாவது வழக்கில் ஜெயகுமார் கைது: மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சாலை மறியலில் ஜெயக்குமார் கலந்துகொண்டார்..
இந்த சாலைமறியலில் அவர் கலந்து நோய்த்தொற்று பரப்பும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை மார்ச் 9ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல் வழக்கில் ஜெயகுமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னொரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.