Connect with us

உலகம்

ஊழியர்களின் வேலைநீக்கத்தை தடுக்க தனது பதவியை ராஜினாமா செய்த முதலாளி!

Published

on

இந்தியாவை சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவில் பத்திரிக்கை நடத்தி வரும் நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலையில் திடீரென தனது வேலையை அவர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் முன்னணி பத்திரிகை ஒன்றை நடத்தி வரும் இந்திய அமெரிக்கர் பீட்டர் பாட்டியா என்பவர் தனது மேனேஜிங் டைரக்டர் பணியை ராஜினாமா செய்வதாகவும் தனது சம்பளம் நிறுத்தப்பட்டால் அதன்மூலம் பல ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

எங்களது பத்திரிகையைத் தொடர்ந்து பொருளாதார ரீதியாக கடினமான காலகட்டத்தில் இருக்கிறது என்றும் இதன் காரணமாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னுடைய சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதால் தான் வேலையை விட்டு விலகினால் அதன் காரணமாக மிச்சப்படும் பணத்திலிருந்து பல ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனக்கு பிரீலன்சர் உள்பட பல்வேறு வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அதன் மூலம் என்னால் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்றும் ஆனால் தனது ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதால் நிறுவனத்தின் நிதி நிலைமையை கணக்கில் கொண்டு தான் ராஜினாமா செய்வதாக கூறினார்.

பாட்டியா அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து தனது சொந்த நிறுவனத்தில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாட்டியாவின் தந்தை லக்னோவை சேர்ந்தவர் என்பதும் அவரது குடும்பத்தில் இருந்து பத்திரிகைத் தொழிலை நடத்தும் முதல் நபர் பாட்டியா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தகவல் தொடர்பு படித்த பாட்டியா அமெரிக்கா முழுவதும் உள்ள பல இணையதளங்களில் பணிபுரிந்து அதன்பிறகு 2010ஆம் ஆண்டு சொந்தமாக பத்திரிகை தொடங்கினார். அந்த பத்திரிகை இன்று அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று உள்ளது என்பதும் அவரது செய்தி நிறுவனங்கள் 10 புலிட்சர் பரிசுகளை வென்று உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?