டிவி
ரத்தம் வரும் வரையெல்லாம் அடிச்சிருக்காரு… சித்ரா வழக்கில் ஹேமந்த் நண்பர் வாக்குமூலம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்றழைக்கப்பட்ட விஜே சித்ரா தற்கொலை வழக்கில் ஹேமந்த் நண்பர் அளித்துள்ள வாக்குமூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த டிசம்பர் 9-ம் தேதி நள்ளிரவில் ஹோட்டல் அறையில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான முக்கியக் காரணமே அவரது கணவர் தான் என்ற கோணத்தில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இடையே சில முறை சித்ரா மரணத்துக்குத் தான் காரணமில்லை என சித்ராவின் கணவர் ஹேமந்த் ஜாமின் கோரினார்.

ஆனால், தொடர்ந்து அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஹேம்ந்த் நண்பர் ஒருவர் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். விஜே சித்ரா மற்றும் ஹேமந்த் டி.நகரில் உள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து வந்த போது ஹேமந்த்-ந் நண்பர் ரோகித் என்பவரும் அவரது மனைவியும் சில நாட்கள் அதே வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அப்போது நடந்தவற்றையையே தற்போது ரோகித் வாக்குமூலமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ரோகித் கூறுகையில், ‘நானும் என் மனைவியும் சித்ரா- ஹேமந்த் உடன் தங்கியிருந்த போது பல சண்டைகள் நடந்துள்ளது. அப்போது எல்லாம் ரத்தம் வரும் வரை எல்லாம் ஹேமந்த் அடித்துள்ளார். நானும் என் மனைவியும் தான் தடுத்து விலக்கிவிடுவோம். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் கூட என்னிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினான். அந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.




















