சினிமா
கர்நாடகாவைச் சேர்ந்த தமிழ் சின்னத்திரை நடிகை நந்தினி தூக்கு போட்டு தற்கொலை – “கெளரி“ தொடரில் இரட்டை வேடமிட்டு நடித்தவர்

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. (வயது 26). இவரது தந்தை மகாபலேஸ்வரா அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரியும் போது இறந்த விட்டார். தந்தையாரின் வேலை வந்த போது அதனை உதறிவிட்டு கன்னட சின்னத்திரை தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “கௌரி“ என்ற தொடரில் கனகா மற்றும் துர்கா என்ற இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.
இவர் பெங்களுரு கெங்கேரி அருகே மைலசந்திரா பாலாஜி நகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் புனித் என்பவரை பார்க்க சென்று விட்டு அறைக்கு திரும்பியவர் புனித்துக்கு செல்பொனில் பேசி தான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
உடனே புனித் நேராக தந்தினியின் விடுதிக்கு வந்து பார்த்த போது அறை உட்புறமாக தாள் போடப்பட்டிருந்தது. அறைக்கதலை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த கெங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சின்னத்திரை ரசிகர்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

















