சினிமா
Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?
Published
1 மாதம் agoon
By
Poovizhi
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர், விதிமீறல் காரணமாக உடனடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டதால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கான பதில் தற்போது வெளியாகியுள்ளது.
‘டிக்கெட் டு ஃபினாலே’ கார்டாஸ்க்கின் போது, சக போட்டியாளர் சான்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சேர்ந்து காலால் எட்டி உதைத்து, காரிலிருந்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சான்ட்ராவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, தொகுப்பாளர் விஜய் சேதுபதி, வன்முறைக்கு பிக் பாஸ் வீட்டில் இடமில்லை எனக் கூறி, இருவருக்கும் ரெட் கார்டு வழங்கினார்.
பிக் பாஸ் தமிழ் வரலாற்றில்,
சீசன் 2-ல் நடிகர் மகத்,
சீசன் 3-ல் நடிகர் சரவணன்,
சீசன் 7-ல் பிரதீப் ஆண்டனி
ஆகியோர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இருவர் வெளியேற்றப்பட்டது இதுவே முதல்முறை. மேலும், வி.ஜே. பார்வதி, பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் ரெட் கார்டு பெற்ற முதல் பெண் போட்டியாளர் என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளார்.
ரெட் கார்டு என்பது சாதாரண எவிக்ஷன் அல்ல. அது ஒரு கடுமையான தண்டனை. உடல் ரீதியான வன்முறை, தகாத வார்த்தைகள் போன்றவற்றில் ஈடுபட்டால், அந்த போட்டியாளர் உடனடியாக வெளியேற்றப்படுவார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் ஒருவர் அளித்த பேட்டியில்,
“ரெட் கார்டு வாங்கி வெளியேறினால், அந்த போட்டியாளருக்கு ஒரு பைசா கூட சம்பளமாக வழங்கப்படாது. இது பிக் பாஸ் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும், பிக் பாஸ் தொடர்பான எதிர்கால நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்க முடியாது. வீட்டில் இருக்கும் போது வென்ற பரிசுகளையும் எடுத்துச் செல்ல முடியாது”
என்று கூறியுள்ளார்.
சுமார் 90 நாட்கள் வரை வீட்டில் இருந்து டாப் 5-ல் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவருக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், ரெட் கார்டு விதி காரணமாக அந்த சம்பளம் வழங்கப்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














