Connect with us

தமிழ்நாடு

ஆளுநர் செயல்… வரம்புகளுக்கு மீறியது: திருச்சி சிவா அதிருப்தி!

Published

on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது.

Trichy siva 1

ஆளுநரின் இந்த கருத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி திருச்சி சிவா, சட்ட மசோதாவை அவர்களால் வைத்துக்கொள்ள முடியாது. அப்படியென்றால் அதை அவர்கள் நிராகரிக்க வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை தான் ஆளுநர் எந்த மசோதாவையும் கையெழுத்திடாமல் வைத்துக்கொள்ளலாம். பின்னர் மறுக்கிறேன் எனச் சொல்ல வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றாது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற சட்டங்களை அவர்கள் இயற்றுகின்ற போது அங்கு ஆளுநராக பொறுப்பில் இருப்பவர் அதற்கு ஒப்புதல் தரவேண்டியது அவர்களது கடமை. அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டமன்றத்தின் மாண்புகளை மீறும் வகையில் செயல்படுவது எல்லாம் அவரது வரம்புகளுக்கு மீறியதாகத்தான் எல்லோரும் கருத முடியும் என்றார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?