Connect with us

இந்தியா

எதன் அடிப்படையில் பணி நீக்கம்? கூகுள் ஊழியர் வெளியிட்ட ரகசியம்..!

Published

on

கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் பலரும் குறைவான தகுதி உடையவர்கள் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நல்ல தகுதி உள்ளவர்களும் திறமையானவர்களும் கூட வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது லிங்க்ட் – இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

google layoff

கடந்த சில மாதங்களாக கூகுள் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தினமும் செய்திகளில் ஏதாவது ஒரு நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் உலகம் முழுவதும் வேலை இழந்து உள்ளனர் என்பது அதனால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை செய்தது என்பதும் அதில் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செயல் திறன் அடிப்படையில் தான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அனிமேஷ் என்பவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட 450-க்கும் மேற்பட்டவர்கள் நிச்சயமாக செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை விட தற்போது பணியில் இருப்பவர்கள் மிகச் சிறந்தவர் என்று சொல்ல முடியாது என்றும் என்னையும் சேர்த்தே நான் சொல்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னை பொருத்தவரை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் அதிக மதிப்பீடுகள் மற்றும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்றும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது அநீதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தல் நிலையில் அனிமேஷின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றால் எதன் அடிப்படையில் தான் பணிநீக்கம் நடைபெற்றது என்பதை கூகுள் நிறுவனம் விளக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிக சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை கூகுள் நிறுவனமே விளக்கம் அளித்தால் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?