Connect with us

இந்தியா

ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.1,688 கோடி கொடுத்து ஏமாந்த வங்கிகள்!

Published

on

ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றன என்பதும் அந்த கடன்களை திரும்ப செலுத்தாமல் பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பி சென்று விட்ட நிலையில் அவர்களிடம் இருந்து பணத்தை எப்படி வசூல் செய்வது என்று புரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே 22 ஆயிரம் கோடி ஏபிஜி ஷிப்யார்டு என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கமலேஷ் அகர்வால் என்பவருக்கு கடன் கொடுத்து வங்கிகள் ஏமாந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.1,688 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக கமலேஷ் அகர்வால் மீது வடக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ரூ.22,000 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக ரிஷி கமலேஷ் அகர்வால் என்பவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி நாட்டிலேயே மிகப்பெரிய மோசடி என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கே இன்னும் முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது தவறான தகவல் அளித்து மீண்டும் ரூ.1,688 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் அதன் தலைமையில் கீழ் செயல்படும் சில வங்கிகள் சிபிஐயிடம் புகார் அளித்துள்ளன. இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் கமலேஷ் அகர்வால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கடன் கொடுத்து மோசடி செய்த நிறுவனத்திற்கு எப்படி வங்கிகள் கடன் கொடுத்தன என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சிறிய கடன்களை கொடுத்துவிட்டு அந்த கடனை திரும்ப செலுத்தாத பொதுமக்களை பொதுமக்களிடம் மிரட்டி வசூலிக்கும் வங்கிகள் பெரிய தொழில் அதிபர்களிடம் கோடி கணக்கில் ஏமாந்து வருவது தொடர் கதை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?