Connect with us

தமிழ்நாடு

இன்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு? அதிர்ச்சியில் தமிழக மக்கள்

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே.

மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தமிழக அரசின் சுகாதாரத் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டில் பலியான 13 உயிர்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் தமிழகம் மீளாத நிலையில் இன்று திருப்பத்தூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 4 பேர் உயிரிழந்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு உயிர் கூட இழப்பு ஏற்படாமல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?