தமிழ்நாடு
ஹிட்லரின் மறு உருவம் தான் ஸ்டாலின்: சிறையில் இருந்து விடுதலையான ஜெயகுமார் பேட்டி!
சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு, நிலமோசடி வழக்கு மற்றும் அனுமதியின்றி போராட்டம் செய்த வழக்கு என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் அனுமதியின்றி போராட்டம் செய்த வழக்கில் ஜாமீன் பெற்ற ஜெயக்குமார் நேற்று நில மோசடி வழக்கில் ஜாமீன் பெற்றார். இதனை அடுத்து அவர் இன்று காலை புழல் சிறையிலிருந்து விடுதலையானார்.
சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் பொய்வழக்கு போட்டு தன்னை சிறையில் திமுக அரசு தள்ளியதாகவும் கள்ள ஓட்டு போட முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதால் தான் நான் கைது செய்யப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தவறு செய்பவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கூறியதை அடுத்து அவர் என்னை சிறைக்கு அனுப்பி உள்ளார் முகஸ்டாலின் என்றும் ஹிட்லரின் மறுபக்கம் தலைவர் மு க ஸ்டாலின் என்றும் தெரிவித்தார் .
ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று கூறிய ஜெயகுமார் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.